search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து துண்டிப்பு"

    • கனமழை காரணமாக பச்சை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் தற்காலிக பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
    • பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்வோர் 8கி.மீ. தூரம் சுற்றி மாற்று பாதையில் சென்று வருகின்றனர்.

    பழனி:

    பழனி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் கடந்த சில நாட்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு கன மழை கொட்டி தீர்த்தது. மேலும் பழனியை அடுத்துள்ள பெருமாள் புதூர், பெரியம்மாபட்டி, பச்சையாறு கிராமங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பெருமாள்புதூர் கிராமத்திற்கு முன்பாக பச்சை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    ஆற்றின் குறுக்கே கிராம மக்கள் கடந்து செல்லும் வகையில் தற்காலிகமாக மண்ணைக் கொட்டி பாதை அமைத்துக் கொடுத்து ள்ளனர். கன மழை காரணமாக பச்சை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் தற்காலிக பாலம் அடித்துச் செல்லப்பட்டது.

    தற்போது பாலம் சேதமடைந்துள்ளதால் பச்சையாறு கிராமத்திலிருந்து பெருமாள்புதூர் கிராமத்திற்கு மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்வோர் 8கி.மீ. தூரம் சுற்றி மாற்று பாதையில் சென்று வருகின்றனர். உடனடி யாக தற்காலிக பாதையை சரி செய்து கொடுக்க வேண்டும் என்றும் பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடித்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பாலம் சீரமைப்பு உடனடியாக நடைபெறாது என்பதால் மேலும் சில நாட்களுக்கு பணியில் தொய்வு ஏற்படும் எனவும் தெரிகிறது.

    • பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 7,200 கன அடியாக அதிகரித்துள்ளதால் மாயாற்றில் மழை நீர் செந்நிறத்தில் சீறி பாய்கிறது.
    • மக்கள் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் அவதி அடைந்துள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி தெங்குமரஹாடா, அல்லிமாயாறு, கல்லாம் பாளையம் ஆகிய வன கிராமங்கள் உள்ளன. இதில் 1500 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள இக்கிராம மக்கள் வனப்பகுதி வழியாக ஓடும் மாயாற்றை பரிசலில் கடந்து சென்ற பஸ்ஸில் ஏறி பவானிசாகர் சத்தியமங்கலம் மேட்டுப்பாளையம் கோத்தகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இதேபோல் இப்பகுதியில் படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பரிசலில் சென்று தான் படித்து வருகின்றனர்.

    மாயாற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் தெங்குமரஹாடா, அல்லிமாயார், கல்லம்பாளையம், சித்திரம் பட்டி கிராம மக்கள் பரிசலில் ஆற்றை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நீலகிரி மாவட்டம் மலைப்பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    தற்போது பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 7,200 கன அடியாக அதிகரித்துள்ளதால் மாயாற்றில் மழை நீர் செந்நிறத்தில் சீறி பாய்கிறது. இதன் காரணமாக வன கிராம மக்கள் ஆற்றலை கடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் வன கிராம மக்கள் ஆபத்தான முறையில் பரிசலில் ஆற்றை கடந்து சென்று வந்தனர். மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் மாயாற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

    மாயாற்றில் தொடர்ந்து வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் தெங்குமரஹாடா , கல்லம்பாளையம், அல்லிமாயாறு சித்திரப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு தற்போது போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மாயாற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் டெம்போ, லாரி உள்ளிட்ட வாகனங்கள் ஆற்றை கடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் வாகனங்கள் மற்றும் பரிசல் மூலம் ஆற்றைக் கடக்க வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வெள்ளப்பெருக்கு காரணமாக கல்லாம்பாளையம், அல்லி மாயாறு, சித்திரப்பட்டி, டெங்குமரஹாடா, ஆகிய கிராம மக்கள் பரிசலில் ஆற்றை கடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் வேலைக்காக வெளியூர் செல்லும் மக்கள் வியாபாரத்திற்காக வெளியிடங்களுக்கு செல்லும் மக்கள் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் அவதி அடைந்துள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது,

    நாங்கள் பல வருடங்களாக இந்த பகுதிகளில் வாழ்ந்து வருகிறோம். வியாபாரத்திற்காக வேலைக்காக படிப்புக்காக இந்த பகுதி மக்கள் குழந்தைகள் செல்வதற்கு மாயாற்றை கடந்து தான் செல்ல வேண்டும்.

    மழை இல்லாத காலங்களில் ஒரு பிரச்சனையும் இல்லை. மழைக்காலங்களில் திடீரென மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விடுகிறது. அந்த சமயம் பரிசலில் சென்றாலும் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. இருந்தாலும் வேறு வழியில்லாமல் ஆபத்தான முறையில் மாயற்றைக் கடந்து செல்கிறோம்.

    எனவே மாயாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    மேலும், அவர் அளித்த புகாரின் பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் மணிக்குமார் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கேப்ரோடு பகுதியில் பாறைகள் உருண்டு விழுந்து மண்சரிவு ஏற்பட்டது.
    • மூணாறிலிருந்து சின்னக்கானல், பூப்பாறை மற்றும் தேனி செல்லும் வாகனங்கள் குஞ்சித்த ண்ணி, ராஜாக்காடு திருப்பி விடப்படுகிறது.

    மேலசொக்கநாதபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் இடுக்கி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மூணாறு பகுதி யில் பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

    கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கேப்ரோடு பகுதியில் பாறைகள் உருண்டு விழுந்து மண்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் மூணாறிலிருந்து சின்னக்கானல், பூப்பாறை மற்றும் தேனி செல்லும் வாகனங்கள் குஞ்சித்த ண்ணி, ராஜாக்காடு திருப்பி விடப்படுகிறது. கேப்ரோ ட்டில் பாதுகாப்பற்ற சாலை நிர்மாணம் காரணமாகவே அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

    இதனை தொடர்ந்து கேப்ரோடு பகுதியில் உருண்டு விழுந்த பாறைகள் மற்றும் மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கனமழை காரணமாக அப்பகுதியை சேர்ந்த அன்னக்கிளி என்பவரின் வீடு இடிந்தது. ராஜாக்காடு ஊராட்சிக்குட்பட்ட மம்பட்டிகானம் பகுதியில் சுரேஷ் என்பவரின் வீடு மீது மரம் முறிந்து விழுந்த தில் சேதம் அடைந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர் மழை காரணமாக போடிமெட்டு-மூணாறு சாலையில் போக்கு வரத்து பாதிக்க ப்பட்டது.

    வாகன ங்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


    • திருப்புவனம் அருகே தொடர் மழையால் பாலம் அடித்துச்செல்லப்பட்டது.
    • போக்குவரத்து பாதிக்கப்பட்டு 5 கிராமங்கள் துண்டிக்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், பிரமனூர் ஊராட்சியைச் சோ்ந்த வயல்சோி-காிசல்குளம் சாலையில் பாலம் அமைந்துள்ளது. தொடா் மழையின் காரணமாக இந்த பாலம் அடித்து செல்லப்பட்டது.

    இந்த பாலம் 22 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு, காிசல்குளம் உள்பட 5 கிராமங்கள் துண்டிக்கப்பட்டது. இந்த சாலை ஊராட்சி ஒன்றிய சாலையாகும்.

    பாலம் சேதமடைந்து உள்ளது தொடா்பாக, கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும், புளியங்குளம் முதல்வாடி தரைப்பாலம் நீரில் மூழ்கி பாலத்திற்கு 2 அடி தண்ணீர் செல்வதைத் தொடா்ந்து, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்குழந்தைகள். பொதுமக்கள் பாலத்தை கடக்க இயலாத நிலை உள்ளதால், உடனடியாக இந்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் மேற்கொண்டு, உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வருவாய்த்துறை, ஊராட்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலா்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது, சிவகங்கை கோட்டாட்சியா் சுகிதா, ஊரக வளா்ச்சித்துறை செயற்பொறியாளா் வெண்ணிலா, நீர்வளத்துறை செயற்பொறியாளா் (சருகனியாறு வடிநிலைக் கோட்டம்) பாரதிதாசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    • வெள்ளத்தில் பாலம் அடித்துச் செல்லப்பட்ட கல்வராயன்மலையில் 3 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
    • பாலத்தை பயன்படுத்தி தான் அந்த 3 கிராம மக்களும் சென்று வருவார்கள்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை ஊராட்சி ஒன்றியம் சேராப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட தும்பராம்பட்டு. தாழ்தும்பராம்பட்டு.. காட்டுகொட்டாய் என மூன்று கிராமம் உள்ளது இந்த 3 கிராமத்திலும் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். அந்த 3 கிராமத்திற்கும் செல்ல வேண்டுமென்றால் தும்பராம்பட்டு கிராமத்தில் ஆறு உள்ளது. இந்த ஆற்றை கடந்துதான் 3 கிராமங்களுக்கு செல்ல வேண்டும் இதனால் ஆற்றின் குறுக்கே தரைபாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை பயன்படுத்தி தான் அந்த 3 கிராம மக்களும் சென்று வருவார்கள். இந்த 3 கிராமத்திற்கு தேவையான ரேஷன் பொருட்கள் பால் வண்டிகள் சென்று வரும் இந்நிலையில் இந்த தரைபாலம் கடந்த ஒரு வருடம் முன்பு பெய்த மழையில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் ஆற்றை கடக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு ஒத்தையடி பாதை வழியாக சென்று வந்தார்கள். இதனால் மூன்று கிராமத்திற்கு செல்லக்கூடிய ரேஷன் பொருட்கள் பால் வண்டிகள் கூட அந்த கிராமத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு ஒரு வருட காலமாக பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இது தொடர்பாக அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை இதனால் அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சேதமடைந்த பாலம்் அருகே புதிதாக பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அதற்காக காலையிலே 9 மணிக்கு அந்த மூன்று கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் தினந்தோறும் தும்பரம்பட்டு ஆற்றுக்கு வந்து அடித்துச் செல்லப்பட்ட பாலம் அருகே ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுவதற்கான பணியில் ஈடுபட்டு கற்கள் சிமெண்ட் பைப்புகள் பயன்படுத்தி ஆற்றின் குறுக்கே போட்டு தற்காலிகமாக பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு அதிகாரிகளை நம்பியது போதும் அதனால் களத்தில் நாமலே இறங்கலாம் என்று அப்பகுதி மக்கள் பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இது தற்காலிக பாலம் தான் தவிர நிரந்தரம பாலம் அல்ல எங்களுக்கு புதிதாக மேம்பாலம் கட்டி தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • திற்பரப்பு அருவியில் குளிக்க தடை- 4 வீடுகள் இடிந்தது
    • பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 38.77 அடியாக இருந்தது. அணைக்கு 1565 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நாகர்கோவில் ;

    தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக குமரி மாவட் டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்து உள்ளது.

    மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் அதிக கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. சூறைக்காற்றுடன் பெய்த மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மரங் கள் வேரோடு சாய்ந்தன.

    நாகர்கோவிலில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்ததில் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் சேதம் அடைந்தது.தீயணைப்பு வீரர்கள் சரிந்து விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.

    பூதப்பாண்டி, குளச்சல், இரணியல், கன்னியாகுமரி, கொட்டாரம், மயிலாடி, மார்த்தாண்டம், குழித்துறை, மாம்பழத்துறையாறு அணை பகுதிகளிலும் நேற்று இரவு இடைவிடாது மழை பெய்தது.

    மாம்பழத்துறையாறில் அதிகபட்சமாக 76 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மலையோரப் பகுதியான பாலமோர் பகுதியிலும் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமான அளவு அதிகரித்துள்ளது.

    பெருஞ்சாணி அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள் ளது. சிற்றார்-1, சிற்றாறு-2 அணைகளின் நீர்மட்டம் 12 அடியை எட்டியதை யடுத்து கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    குழித்துறையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அங்குள்ள தடுப்பணையை மூழ்கடித்து வெள்ளம் செல் கிறது. கோதையாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டுள்ளது. மோதிரமலை-குற்றியார் தரை பாலத்தை தண்ணீர் மூழ்கடித்து செல்கிறது. இதனால் தச்சமலை, களபாறை உள்பட 10 மலை யோர கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மலையோர கிராமங் களில் பெய்து வரும் மழையால் பொதுமக்கள் பரிதவிப் பிற்கு ஆளாகி வருகின்றனர்.

    திற்பரப்பு பகுதியிலும் மழை கொட்டி தீர்த்து வருவதால் அருவியில் வெள்ளம் ஆர்ப் பரித்து கொட்டி வருகிறது. இதனால் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகைகள் அங்கு வைக்கப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 38.77 அடியாக இருந்தது. அணைக்கு 1565 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 249 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 63.35 அடியாக உள்ளது. அணைக்கு 990 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றார்-1 நீர்மட்டம் 12.4 அடியாகவும், சிற்றார்-2 அணை நீர்மட்டம் 12.13 அடியாகவும் உள்ளது. தொடர் மழையின் காரண மாக பாசன குளங்கள் மற்றும் கால்வாய்களின் கரை பகுதிகளை பொதுப் பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார் கள்.

    4 வீடுகள் இடிந்தது

    மழைக்கு அகஸ்தீஸ்வரம், விளவங் கோடு தாலுகா வில் தலா ஒரு வீடுகளும், தோவாளையில் 2 வீடு களும் இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கன மழை எச்சரிக்கை விடப்பட்டதை எடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு கலெக்டர் அரவிந்த் விடுமுறை அறிவித்துள்ளார்.

    மேலும் மழை வெள்ள சேதங்கள் குறித்து தகவல் தெரிவிக்க நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திலும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை திறந்து செயல்பட்டு வருகிறது தீயணைப்பு துறையினரும் தயார் நிலை யில் உள்ளனர்.

    இன்று காலையில் வெயில் அடித்தது. அதன் பிறகு வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. விட்டு விட்டு மழையும் பெய்தது.

    ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி புர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்டதன் நினைவு தினத்தை ஒட்டி காஷ்மீரில் போக்குவரத்து, தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. #Kahmir
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் கடந்த 2016ம் ஆண்டு ஜூலையில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தளபதியான புர்ஹான் வானி சுட்டு கொல்லப்பட்டார். 

    அவரது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை ஒட்டி காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இன்று பொது வேலை நிறுத்தத்திற்கு பிரிவினைவாத அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதனால் பயணிகள் பாதுகாப்பினை முன்னிட்டு ரெயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    இதனால் ஸ்ரீநகர்-பத்காம் மற்றும் வடகாஷ்மீரின் பாராமுல்லா ஆகிய பகுதிகளுக்கு ரெயில்கள் இயக்கப்படாது.  இதேபோன்று தெற்கு காஷ்மீரின் ஜம்மு பகுதியில் பத்காம்-ஸ்ரீநகர்-அனந்த்நாக்-குவாஜிகண்ட் பகுதியில் இருந்து பனிஹால் செல்லும் ரெயில் சேவையும் தற்காலிக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    காஷ்மீரில் இந்த ஜூலையில் ரெயில் சேவை ரத்து செய்யப்படுவது இது 2வது முறை ஆகும். கடந்த காலங்களில் கல் வீச்சுகள் மற்றும் பிற போராட்டங்களால் ரெயில்கள் பலத்த சேதமடைந்தன. 

    தேச விரோத செயல்களுக்காக துக்தர்-இ-மிலாத் அமைப்பின் தலைவியான ஆசியா அந்த்ரபி மற்றும் அவரது 2 உதவியாளர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிவினைவாதிகள் நேற்று ஒரு நாள் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.  இந்நிலையில், இன்று 2வது நாளாக பொது வேலை நிறுத்தம் தொடருகிறது.
    ×